Thursday 14 November 2013

அண்ணனும் தங்கையுமாக எனது மொபைலில் இருந்து பாடிக் கொல்கிறார்கள்.. உலகத்தில் சிறந்த நட்பு பற்றிய படம் எது எனக் கேட்டால் நான் சலங்கை ஒலியைத்தான் சொல்வேன். அதில்தான் சரத்பாபு, கமலின் நட்பு அப்படி இருக்கும். எல்லாப் பாடலகளும் அவ்வளவு பிடிக்கும். அதிலும் வேதம் அணுவிலும் ஒரு நாதம் என்ற பாடல் மிகவும் ப்ரீதி.. ரிபீட் போட்டு மொபைலில் அவ்வப்போது கேட்பேன். எஸ்பிபியும் ஷைலஜாவும் ரொம்ப கவனமாகவும் இயைந்தும் பாடியிருப்பார்கள்..ஒவ்வொரு முறை கேட்கும்போதும் நான் கண் கலஙகுவது கட்டாயம் நடக்கும்..

என் மொபைலில் இருப்பது அதன் தெலுங்கு வெர்ஷன். வேதம் அணுவுலனொக நாதம் என்றுதான் பாலு பாடுகிறார். ஷைலு மாத்ரு தேவோ பவ.. எனத் துவங்கி ஆச்சார்ய தேவோ பவ என முடிக்கையில் ஒவ்வொரு முறையும் கண் கலங்கிவிடுகிறது. அதற்கு காரணம் பாடல் வரிகள் அல்ல. ஆசானும் அப்பனுமான கே. விஷ்வநாத் எடுத்த காட்சிகள் மனதுக்குள் வந்து திண்மமாக நிற்பதுதான்..

கடைசியாக பாலு பாடுகிறார் :
நாஷ்திஷ்ஜரா மரணஜம் பயம்
நாஷ்திஷ்ஜரா மரணஜம் பயம்..

என்று..

என்ன அர்த்தம்..? மரண பயத்தை அழித்துவிடு இறைவா என்றா..? தெலுங்கு அறைகுறையாக தெரியும். சமஸ்கிருதம் குறைகுறையாக தெரியும்.. ஆனாலும் இசை புரியும்..

அந்த வரிகளுக்குப் பின் அந்த கேரக்டர் செத்துவிடும். ஆகவே அதை மரண பயத்தை அழித்துவிடு இறைவா என்றே கொண்டு இதுநாள் வரை ஒவ்வொரு முறையும் கண் கலங்கி வருகிறேன்..

என்ன பொருளாக இருந்தால் என்ன..? எனக்கு புரிந்ததே எனது அர்த்தம்.. ஆகவே.. நாஷ்திஷ்ஜரா மரணஜம் பயம்..

No comments:

Post a Comment