Saturday 4 January 2014

பசியாறியவனின்
தூக்கத்துக்காகவும்
நோய் நீங்கியவனின்
பெருமூச்சுக்காகவும்
ஏங்கிய ஒருத்தி காத்திருக்கிறாள்..

ங்ஙா என்ற
ஒற்றைச் சொல்லில்
சாபல்யம் அடைந்தவள்..
எச்சில் வடியும்
ஒற்றை முத்தத்தில்
பிறவிகள் கடந்தவள்..

முதுமையின் நிசப்த வனத்தில்
வார்த்தைகளைப்
பிச்சையெடுத்து
காத்திருக்கிறாள்..

1 comment:

  1. கவிதை அருமை.... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete