Sunday 23 March 2014

உங்களுக்கு நிறைய கவலைகள்
உங்கள் பர்சுகளில்
பணம் குறைந்திருக்கலாம்
உங்களது கேர்ள் ஃபிரண்ட்
சண்டையிட்டிருக்கலாம்
உங்களது இருசக்கர வாகனம்
கிளம்ப மறுத்திருக்கலாம்
இன்னும் இன்னும் சில பல காரணங்கள்
இருந்ததனால்
ஒரு ஓரத்தில் கிடக்கும்
என் விண்ணப்பத்தை
நீங்கள்
கவனிக்காமல் இருந்திருக்கலாம்.
உண்ட கையைக்
கழுவ நேரமில்லாமல்
பேப்பரில் துடைக்க விழையும் நீங்கள்
என் விண்ணப்பத்தில்
கைதுடைக்கும் முன்பாக
அதன்
கடைசி வரியை மட்டுமாவது
படியுங்கள் அய்யா..
அது சொல்கிறது :
எனக்கு
ரொம்பப் பசிக்கிறது சாமி..

2 comments:

  1. வேலைதேடும் இளைங்கர்களின் உள்ளத்தின் வலி உங்கள் கவிதையில் வழிகிறது..

    ReplyDelete
  2. மைதிலி கஸ்தூரி ரெங்கன் தங்களைப் பற்றி விவாதிக்கிறார் இன்றைய வலைச்சரத்தில். வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete