Sunday 23 March 2014

அற்புதம் செய்பவர்களிடம்
எனக்கு
இரண்டேயிரண்டு
கேள்விகள்தாம் உள்ளன
(1)
நீங்கள் வலக்கை உயர்த்தி
அற்புதங்கள் செய்தபோது
உங்கள்
இடக்கைகள்
என்ன செய்து கொண்டிருந்தன?
(2)
ஒரு கை இல்லாதவர்களோ
இருகையும் இல்லாதவர்களோ
அற்புதங்கள் செய்ய
ஆசீர்வதிக்கப்பட மாட்டார்களா?

No comments:

Post a Comment