Sunday 23 March 2014

ஏய் நில்லு. எங்க போற..?
அங்க..
யாரப் பாக்கப் போற?
பேயம்மா.
நான் யாரு?
பேயப்பா.
உன் பேரு என்ன?
பாப்பா.
உங்கப்பன் பேரு என்ன?
அப்பா.
உங்கம்மா பேரு?
அம்மா.
உங்கப்பனையும் அம்மாவையுமே
கொஞ்சிக்கிட்டு
இருக்க வேண்டியதுதானே..
இங்க எதுக்கு வந்த..?
............
இது என்ன?
....
சிரிக்காத. இது என்ன?
சாக்கேட்டு..
யாருக்கு?
பாபபாக்கு..
பாப்பாக்கு மட்டுமில்ல.
பாப்பாவோட அக்காவுக்கும்.
..
சிரிச்ச. கொன்னுருவேன்.
என்னடி இது? 
பிடுங்கிக்கிட்டுப் போறா..?
சாக்லேட்டை காட்டுனா 
விட்டுட்டா போவா?
இந்த மிரட்டு மிரட்டுறேன்.
பயமே இல்லையாடி அவளுக்கு?
பயந்துட்டாலும்...
ஏண்டி. எல்லா சாக்லேட்டையும்
ஒருத்தியா தின்னா
புழுக்கடிக்கும்டி.
இதை சாக்லேட்டை காட்டுறதுக்கு
முன்னாடி கேட்டிருக்கணும்.
அவங்க அக்காவுக்கு இல்லையேடி.
போங்க. போயி வாங்கிட்டு வாங்க.
இல்லன்னா
அந்த பஞ்சாயத்தையும் 
நீங்கதான் தீர்க்கணும்.
அடிப்பாவிங்களா..
அந்த சட்டைய எடுடி..

No comments:

Post a Comment