Sunday 23 March 2014

வெண்ணுரை பொங்க
பாறைகளில் மோதி
சுழித்தோடும் சிற்றாற்றில்
மிதந்தலையும் இலை போல
இச்சாலையில் அலைக்கழிகிறது
சின்னஞ்சிறு ஒற்றைச் செருப்பு..
கடைசி தருணத்தில்
அதை நோக்கி நீண்ட
பிஞ்சு விரல்கள்
என் நினைவுக்கு வருகின்றன..

No comments:

Post a Comment