Sunday 23 March 2014

சொட்டும் துளிகள் எல்லாம்
ஒரு வாழ்வை
க்ளக்கென்று சொல்லிப் போகின்றன.
மறுக்கப்பட்ட தண்ணீர்த்துளி
உதிர்ந்த உதிரம்
உதிரத்தின் வழி உயிர்
கண்ணீர்
பசித்த உமிழ்நீர்
கூலிமறுக்கப்பட்ட வியர்வை
கானல் மழைத்துளி
மற்றும்
கருகும் பயிருக்கு
விவசாயியின் கனவில்
பெய்த மழை
எவ்வென்றாயெல்லாமோ
மொழியை உள்ளே வைத்திருக்கிறது
க்ளக்கென்றவொரு ஒலி..

No comments:

Post a Comment